பெண் போலிசாருக்கு முதல்வர் முக்கிய சலுகை! மகப்பேரு விடுப்புக்கு பின் சொந்த மாவட்டத்திலோ அல்லது கணவர் உள்ள மாவட்டத்திலோ பணியாற்றலாம்!

பெண் போலிசாருக்கு முதல்வர் முக்கிய சலுகை! மகப்பேரு விடுப்புக்கு பின் சொந்த மாவட்டத்திலோ அல்லது கணவர் உள்ள மாவட்டத்திலோ பணியாற்றலாம்!

ம.பா.கெஜராஜ்,

 மகப்பேறு விடுப்புக்கு பின் சொந்த மாவட்டத்திலோ அல்லது கணவர் உள்ள மாவட்டத்திலோ பணியாற்றலாம் என்று பெண் போலிசாருக்கு முதல்வர் முக்கிய சலுகையை அறிவித்துள்ளார். 

 காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை, தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

பின்னர் அவர் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

 ஆணையம்

அந்த விழாவில் முதல்வர் பேசுகையில், போலிசாருக்கு பதக்கம் வழங்கும் நடைமுறையை 1967 ஆம் ஆண்டு கருணாநிதி தொடங்கி வைத்தார். அதே போல் கருணாந்தி அவர்களால் 1970 ஆம் ஆண்டு காவல் துறை  நவீன மயமாக்கப்பட்டது. மேலும் காவல் துறைக்கு ஆணையம் அமைத்ததும் கருணாதிதிதான். இப்போது முன்னாள் நீதிபதி சிடிசெல்வம் தலைமையில் மூன்றாவது ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறாது.

 பெண் காவலர்களுக்கு சலுகை.

 மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது சொந்த மாவட்டத்துக்கே பணி மாறுதல் வழங்கப்படும். ஏற்கனவே தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

 இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.

 அந்தக் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது பணிமூப்புக்கு விலக்கு அளித்து, அவர்களுடைய பெற்றோர் அல்லது கணவர் வீட்டினர் வசிக்கும் மாவட்டங்களுக்கே பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சினைகளை தீர்ப்பதில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர். இப்படிப்பட்ட குற்றங்களை கையாள்வதில் பெண் காவலர்களின் தொழில்முறை திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று பேசினார்.