அதிகாரிகள் சீட்டுகள் வெறிச்? பாவம் பொதுமக்கள்!

க.பாலகுரு,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினா.
இதில் கோரிக்கைகளாக - கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊராக வீடுகள் பழுதுநீக்கும் திட்டத்திற்கு உரிய ஊழியர் கட்டமைப்பை வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
17பி குற்றச்சாட்டு குறிபானைகளை நீக்க வேண்டும், கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் , பிரதமர்மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் 1,159 வீடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிதியினை அரசு அலுவலர்களிடம் திரும்ப வசூல்செய்யும் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பதை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 917 நபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.பாவம் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் திருவாரூர் மாவட்டதலைவர் என்.வசந்தன்,மாவட்டச்செயலாளர் கே.செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவகுமார், வட்டக் கிளைத்தலைவர் சிவனேசன், வட்டகிளைச்செயலாளர் ஆனந்த், மாவட்டத் துணைத்தலைவர் மோகன் உட்பட நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.