நீங்கள் எங்களை ஏமாற்றினால்...2026-ல் நாங்கள் உங்களை ஏமாற்றுவோம்! அரசை மிரட்டும் அரசு ஊழியர்கள்!

நீங்கள் எங்களை ஏமாற்றினால்...2026-ல் நாங்கள் உங்களை ஏமாற்றுவோம்! அரசை மிரட்டும் அரசு ஊழியர்கள்!

கு.அசோக்,

 ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டபடி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக அரசே பழைய புதிய முறையை நடைமுறைப்படுத்து , இடைநிலை ஆசிரியர் முதுநிலை ஆசிரியர் அரசு கண்காணிப்பாளர் ஊதியம் முரண்பாடு அணிக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், சரண் விடுப்பு  

 தடையானை நீக்குதல் சத்துண ஓவியர் கிராம உதவியாளர் மற்றும் இதர தொகுப்பு ஊதிய ஊதியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல், போன்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசாணை 243 ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 60 கும் மேற்பட்டோர்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மறியல் போரை ஆதரித்து மாவட்ட தலைநகரில் 30 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அந்த வகையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மறியல் போரை ஆதரித்து மாவட்ட தலைநகரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளுக்கான மாவட்ட தலைநகரங்களில் மரியார் போர் நடத்துகிறார்கள். அவர்களின் மறியல் போரை ஆதரிக்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் 30க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தேர்தல் கால வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற கோரியும்   அல்லது பதவி விலகு என ஜாக்டோ ஜியோவை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

 திருப்பத்தூர் சிவராஜ் விடுதி அருகில் ஜாக்டோ_ஜியோ சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக அரசு எதிராக பாதகை ஏந்தி கடும் வெயிலில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும்,காலவரையின்றி முடிக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கை வலியுறித்தி திமுக அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

   அப்போது கோஷமிட்ட அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் உடனடியாக திமுக அரசு வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷமிட்டனர்.

  மேலும்  நீங்கள் எங்களை ஏமாற்றினால்...2026 நாங்கள் உங்களை ஏமாற்றுவோம்! என்று கூவினர்.