நியாய விலை கடை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பல்லலப்பள்ளி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி மக்கள் நியாயவிலை கடைக்கு செல்ல சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு சென்று வரவேண்டிய நிலைமை உள்ளது.
எனவே இப்பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 6 மாத காலமாக மனு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் இதுவரை அப்பகுதியில் நியாய விலை கடை அமைக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் திருப்பத்தூர் வழியாக கந்திலி செல்லும் பல்லலப்பள்ளி பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.