அம்மாடியோவ் 708 கோடி கல்லாகட்டிய டாஸ்மாக்!

அம்மாடியோவ் 708 கோடி கல்லாகட்டிய டாஸ்மாக்!

ஜி.சாந்தகுமார்,

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு சரக்கு விற்பனையாகியுள்ளது-இதில் மதுரை முதலிடம் பிடித்தது . 

 கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி «431 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கல்லா கட்டியது.   இந்நிலையில் இந்த ஆண்டு  கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு சரக்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு சரக்கு விற்பனையாகியுள்ளது.