மீன் வியாபாரி மனைவியுடன் கள்ள உறவு! நண்பனை அறுத்து போட்ட பரிதாபம்!

S.Selvaraj,
கேரள மாநிலம் வரயனூர் கல்லுங்கள் பகுதியை சேர்ந்தவர் வினோத் என்கிற மோன்சி. 46 வயதான இவர் மீன் வியாபாரியாக உள்ளார். எரக்காவு, பாரக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் மோன்சியின் நண்ப¢ராவார். பிரதீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அப்படியிருக்க, கடந்த திங்கள் கிழமை பிரதீப்புக்கும் மோன்சிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்பை கத்தியால் மீன் அறுப்பதைப்போல அறுத்துள்ளார் மோன்சி. பின்னர் அவரை அப்பகுதியில் உள்ள நெல் வயலில் தள்ளி சேற்றால் மூடியுள்ளார்.
இது குறித்து தனது வீட்டிற்கு வந்த மோன்சி, பிரதீப்பை கத்தியால் குத்திவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அப்பகுதியில் தேடினர். ஆனால் இரவு நேரம் என்பதால் பிரதீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பிரதீப்பை தேடினர். அப்போது நெல் வயலில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் பிரதீப்பின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரதீப்பின் உடம்பில் 5 இடங்களில் கத்தி காயம் இருந்துள்ளது. வயிற்றில் ஆழமான ஒரு கத்தி காயமும், முதுகில் 4 இடங்களிலும் கத்தி காயம் இருந்துள்ளது. இதுகுறித்து மீன் வியாபாரியான மோன்சியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது மனைவியுடன் பிரதீப்புக்கு தகாத உறவு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் மோன்சி. முதலில் பிரதீப்பின் வயிற்றில் குத்தியதாகவும் அவர் தப்பியோட முயன்றபோது அவரது முதுகில் குத்தியதாகவும் தெரிவித்தார்.