தோல் ஷாப்புகளின் ரசாயன நீரால் ஏரியில் விஷம் கலப்பு! மீன்கள் இறந்து மிதக்கிறது!

ஜி.கே.சேகரன்,
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி மோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஏரி முழுவதும் நீர் நிரம்பி காணப்பட்டது.
இந்த ஏரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏரியில் மீன் வளர்க்க ஏலம் விடப்பட்டது.
இதில் அதே கிராமத்தை சேர்ந்தர்கள் ஏலம் எடுத்து, சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனா.
¢ இந்த நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள பெரும்பாலான இடங்களில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகலிருந்து வெளிவரும் தோல் கழிவுநீர் முழுவதும் இந்த ஏரியில் இரவில் நேரங்களில் திறந்து விடுவதால் அது இந்த ஏரி பகுதி முழுவதும் கலந்து மீன்கள் செத்து மிதக்கிறது மேலும் ஏரியில் இறந்து கிடந்த மீன்களால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியும் காணப்பட்டது.
வாலாஜாவில் மிகவும் பழமை வாய்ந்த ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.