குடிகார பிரஜையால் டிஸ்டர்ப் ஆன கிராம சபைக்கூட்டம்!

குடிகார பிரஜையால் டிஸ்டர்ப் ஆன கிராம சபைக்கூட்டம்!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மனு கொடுக்க வந்த குடும்பத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால்  அலுவலகம் முன்பு அமர்ந்து சர்ச்சை  மாடப்பள்ளி கிராம சபா கூட்டத்தில் குடிமகனின் அலப்பறையால் பரபரப்பு. 

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமம் கோவிலூர் கிராம பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) இவருடைய மனைவி சித்ரா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

 இந்த நிலையில் இவர் சுமார் பத்து ஆண்டு காலமாக அரசு வீடு வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

 மேலும் இந்த நிலையில் ஊராட்சி செயலார் சங்கர் என்பவர் இவருடைய மனுவை வாங்கவும் மறுத்துள்ளார். இதன் காரணமாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மனு கொடுக்க வந்தபோது கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் அனைவரும் இவரை கண்டவுடன் எழுந்து சென்றதாக தெரிகிறது.

  இதனால் மன உளைச்சல் அடைத்த ரமேஷ் உடனடியாக புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் மற்றும் திடீரென தர்ணாவில் அமர்ந்தார்.

 இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இருப்பிடம் இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்ளை என்பது குறிப்பிடத்தக்கது

 இதனிடையே திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மகேந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நபர்கள் பல ஆண்டுகளாக தங்கள் பகுதிகளில் உள்ள சாலை குடிநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு  அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம் உடனடியாக அதை சரி செய்யாவிட்டால் ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மனு கொடுத்தனர்.

   ஒரு சில நபர்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களே அழைக்கப்படவில்லை நிர்வாகிகளும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

   மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குடிபோதையில் வந்த நபர் ஒருவர் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் அலப்பறை செய்து கொண்டிருந்தார்.

   அப்போது அங்கிருந்தவர்கள் குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் ஓரமாய் படுக்க வைத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கலாட்டா செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.