ஆரோக்கியமான சமுதாயத்தை ஏற்படுத்த சிந்தித்து செயல்பட வேண்டும்! சிஎம்சி விழாவில் ஆட்சியர் பேச்சு!

கு.அசோக்,
பிரதமரின் மருத்துவ காப்பீடு மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள சி.எம்.சி என்கிற கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய வார்டினை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் திறந்த வைத்தார்.
பின்னர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பங்கேற்று பேசுகையில் பிரதமர் காப்பீடு மற்றும் முதல்வர் காப்பீடு திட்டங்கள் மூலம் நம் மாநில நோயாளிகள் மற்றும் பிறமாநில நோயாளிகளுக்கும் இந்த திட்டங்கள் பயனளிக்கும். இதன் மூலம் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது அதனால் வெளிநாடுகளிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இம்மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படும் வகையில் மாவட்டத்திற்கு முன்னோடியாக இந்த மருத்துவமனை உள்ளது.
இதனால் பெரும்பாலானோர் இங்கு காப்பீட்டு சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது மக்களுக்கு பயனளிக்கும் மேலும் மருத்துவத்துறை மேம்பாடு அடைய ஆரோக்கியமான சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என சிந்தித்து செயல்பட வேண்டும் என பேசினார்.
இந்த விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் திரளான மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்றனர் இங்கு 24 படுக்கைகளுடன் கூடிய முதல்வர் மற்றும் பிரதமர் காப்பீடு சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது.
இதே போன்று ராணிப்பேட்டையில் உள்ள் சி.எம்.சியிலும் 25 படுக்கைளுடன் சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் பயனடைவார்கள்.
குறிப்பு:-தற்போதெல்லாம் இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியிருக்கிறது அதையும் அவர்கள் கலைய வேண்டும், ஏனெனில் இதன் நிர்வாகி மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர் அவர்களின் கனவும் நனவும் அதுவே.