ஒரு கோடி ரூபாய் வரை கல்விக்கடன்! அக் 7-ம் தேதி மாவட்டம் தோறும் முகாம்!

ம.பா.கெஜராஜ்,
வறுமை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் போய் விடக் கூடாது. எனவே தான் உயர்கல்வி படிப்பிற்கு கடன் வழங்கும் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் அது ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.
ஆனால் ரிசர்வ் வங்கியின் என்னவென்றால் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேரவும், 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பு படிக்கவும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்து கொண்டிருப்பவர்களும், முதுகலை படித்து கொண்டிருப்பவர்களும் கல்வி கடன் பெற முடியும். அதுமட்டுமின்றி வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் நபர்களும் கல்வி கடன் பெறலாம்.
அந்த வகையில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், மெடிக்கல், நர்சிங் போன்ற பல்வேறு படிப்புகளில் சேரும் மற்றும் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் நடைபெறும் இந்த முகாமில் 10 க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனி ஸ்டால்கள் போடப்பட்டிருக்கும்.
அங்கு நேரில் சென்றால் கல்வி கடன் பெறுவது தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பம் முதல் கல்வி கடன் தொகை கைக்கு வருவது வரை அனைத்தையும் தெளிவாக விளக்குவர். இந்த சிறப்பு முகாமில் தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் இ-சேவை மையத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைப்பர்.
கல்வி கடனை பொறுத்தவரையில் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் பெற முடியும். இந்த கடனை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. படிப்பு முடித்தவுடன் ஓராண்டிற்கு மட்டும் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு கடன் தவணையை செலுத்த ஆரம்பித்து விட வேண்டும். சில வங்கிகள் குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்குகின்றன. அவற்றை தேர்வு செய்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் படிக்க வேண்டியது அவசியம். தங்கள் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் பெற்றிருப்பது கடன் பெறுவதற்கு ஒரு தகுதியாக பார்க்கப்படுகிறது.இங்க தான் வச்சாங்க செக்.