வேலூர் சரவணபவன் ஓட்டலில் திமுக கவுன்சிலர்கள் அடிதடி!!

 உ.சசிகுமார்,
  வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஓட்டல் சரவணபவன் உள்ளது. இந்த கட்டிடம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுதாகர் குடும்பத்துக்கு சொந்தமானதாகும்.
  நேற்று சுதாகர் அவரது கட்டிடத்தில் இருந்த போது தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் வி.எஸ்.முருகன் சில நபர்களுடன் அங்கு வந்திருக்கிறார்.  அப்போது கவுன்சிலர் சுதாகருக்கும், முருகனுக்கும் வாய்தகறாறு ஏற்பட்டிருக்கிறது.
 பின்னர் இருவரும் சரமாரியாக தாக்கிகொண்டனர். இதில் கவுன்சிலர் சுதாகரை ரவுண்டு கட்டி அடித்தனர். 
   இந்த மோதலில் ஒருவரை ஒருவரை தாக்கிக்கொண்டதால் நேற்று சரவணபவன் நேற்று இரவு சரவணபவன் ஓட்டலில் பெரிய களேபரம் நடந்துள்ளது.


 அடிபட்ட அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டனர்.
 பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட மோதல் என்று சொல்லும் உடன் பிறப்புகள், மோதிக்கொண்டவர்களில் ஒருவர் எம்.எல்.ஏ. டீம் மற்றொருவர் எம்.பி டீம் என்று சொன்னதுடன், இதில் ஒருவர் எப்போதுமே குடித்துவிட்டு அராஜகத்தில் ஈடுபடுபவர் என்கிறார்கள்.
  வடக்கு காவல் நிலையத்தார்தான் நடவடிக்கை எடுக்கனும்? பார்க்கலாம்!