எடப்பாடியின் பிணாமியா?பரோட்டா மாஸ்டராக இருந்தவரிடம் ரூ1000 கோடி உள்ளது! நீக்கப்பட்ட நிர்வாகி பேட்டி!

டி.இ.முகமது,
எடப்பாடி பழனிச்சாமியின் பிணாமி என கருதப்படும் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாஜலத்திடம் ரூ.1000 கோடி உள்ளது. பரோட்டாகடையில் வேலை செய்தவரிடம் இவ்வளவு பணமா? என அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது சொன்னார்.
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் ஏமாற்றியதாக சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தர் ஏ.வி.ராஜூ. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு கொடுத்தார். அதன் பின்னர் ஏ.வி.ராஜூவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதனால் வெறுப்படைந்த ஏ.வி.ராஜூ நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், என்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. அவர் பொதுச் செயலாளர் ஆக நானும் கையெழுத்திட்டுள்ளேன். மாவட்ட செயலாளர் வெங்கடாஜலத்திடம் 300 சதுர அடி வீடுதான் இருந்தது. பரோட்டா கடைக்கு வேலைக்கு சென்ற அவரிடம் தற்போது ரூ.ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தால் என் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர் சொத்து குவித்தது குறித்த வருமானவரித்துறை, அமலாக்கத்துறையில் புகார் அளிப்பேன், ஐகோர்ட்டிலும் வழக்கு தொடருவேன். தேர்தலின் போது தன்னிடம் ரூ.2.75 கோடி மதிப்பில் தான் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது ஆயிரம் கோடிக்கு சொத்து இருப்பது பற்றி வழக்கு தொடர்வேன்.
அவர் எடப்பாடிக்கு பினாமியாக கூட செயல்படலாம். எடப்பாடி தரப்பினரிடம் ரூ.10லட்சம் கோடி உள்ளது. வரும் தேர்தலுக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சேலம் மேற்கு ஒன்றியத்தில் அனைத்து நிர்வாகிகளும் விரைவில் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று சொன்னார்