அரசை பொருத்தவரை சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும்! அமைச்சர் எ.வ.வேலு! சங்கங்கள் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
தமிழக சட்டப்பேரவையில், சுங்க கட்டண உயர்வு குறித்து வேல்முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு மனுக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 6805 கி.மீ நீளம் கொண்டவை. இவைகளில் 58 சுங்கச்சாவடிகள் உள்ளது. மேலும், மத்திய அரசு, நடைமுறையில் உள்ள சட்டப்படியே சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
36 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் அரசு தனியார் மூலம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் தமிழகத்தில் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை வைப்பதோடு, சுங்க கட்டணத்தை நீக்கவும், குறைக்கவும் கடிதமும் எழுதப்படுகிறது. கடந்த 18.3.23-ந் தேதி கூட இறுதியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக கட்டணம் வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தி.மு.க. அரசை பொருத்தவரை சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும், சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும், குறைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
சுங்கச்சாவடிகளில் ஆர்பாட்டம்.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடி மற்றும் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி முன்பு இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி,
அதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி முன்பாக புத்துக்கோயில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகப்பா கலந்து கொண்டு கண்டன உரையாற்றி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு லாரி உரிமையாளர் அளித்த பேட்டியில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட சுங்கச்சாவடி நடைமுறைகளை தொடர்ந்து பாஜக அரசு நிறைவேற்றி வருவதை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தார் ஆனால் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழகத்தில் அதிக விபத்துகள் ஏற்படுவதால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தங்கு தளம் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் அதனை மத்திய மாநில அரசுகள் பின்பற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார் இதில் மாவட்ட தலைவர் அனுமுத்து உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாலாஜா,
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி முன்பு சுங்கச்சாவடியில் கட்டண விலை உயர்வை உயர்த்திய மத்திய தேசிய நெடுஞ்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கட்டண உயர்வை எதிர்த்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி முன்பாக ராணிப்பேட்டை லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடியில் 5 சதவீதம் 15 சதவீதம் கட்டண உயர்வை உயர்த்திய மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக கட்டண உயர்வை குறைத்திட வேண்டுமென்று பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.