45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினத்தை சேர்ந்தவர் காங்... கட்சியின் தலைவரானார்! சவால்களை சமாளிப்பாரா செல்வபெருந்தகை!

உ.சசிகுமார்,
45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் நியமித்திருக்கிறது. கக்கன் (1952), இளையபெருமாள் (1979) ஆகியோருக்கு அடுத்தபடியாக, செல்வப்பெருந்தகைக்கு தலைவர் இருக்கை கிடைத்திருக்கிறது. இவர் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ.வாக உள்ளார்.
இந்நிலையில் பெரியாரும், காமராஜரும் அமர்ந்த இருக்கையில் செல்வப்பெருந்தகை அமர இருப்பதை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
செல்வபெருந்தகைக்கு தலைவர் பதவி கிடைத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட, அவர் உடனடியாக இவர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள், தனித்தே போட்டியிட விரும்புகின்றன. ராமர் கோயில் திறக்கப்பட்டிருப்பதை பாஜக பெரும் பலமாக கருதுகிறது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது. இதை எல்லாம் எதிர்கொள்ள செல்வபெரிந்தகை தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
அதே போல் வழக்கம் போலவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி பகைமையை முடிவுக்கு கொண்டு வந்து, கட்சியை ஒற்றுமையாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. இதை அவர் எப்படி வெல்வார் என்பதை பொருத்தே இவரது தலைமைப்பண்புக்கு வலு கொடுக்கும்.
ஆக புதியதாக பொறுப்பேற்கும் செல்வபெருந்தகை தேர்தலை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்த பார்ப்போம்.