புஸி ஆனந்தின் சமரசத்தை மாவட்ட தலைவர் மதிக்கவில்லையா? விஜய் கட்சிகாரர்களுக்கிடையே வெட்டுக் குத்து!
ஆ.ஜோ,
விஜய் கட்சிகாரர்களுக்கிடையே வெட்டுக் குத்து ஏற்பட்டுள்ள நிலையில் புஸி ஆனந்தின் சமரசத்தை மாவட்ட தலைவர் மதிக்கவில்லை என்று முப்பது ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி உஷாராணி வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் என்கிற செல்வம் வயது 44 விஜய் மக்கள் இயக்க குடியாத்தம் ஒன்றிய தலைவராக உள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நடிகர் விஜயின் கோட் படத்தின் ஸ்டிக்கர்களை சில வாலிபர்கள் ஆட்டோவில் ஒட்டி உள்ளனர். எனவே கலைச் செல்வம் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் சிலரை சேர்த்துக்கொண்டு கள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே ஆட்டோவில் விஜய் பட ஸ்டிக்கர்கள் இளைஞர்களை விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவராக நான் இருக்கும் போது நீங்கள் எப்படி விஜய் மக்கள் இயக்கம் என விஜய் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம் என கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த வாலிபர்கள் கள்ளூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள சி.எம்.செல்வம் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த சி.எம்.செல்வம் கலைச்செல்வத்திடம் பேசிய நிலையில் இருதரப்புக்கும் பிர்ரச்சனை வெடித்தது.
இருதரப்புக்கும் ஏற்பட்ட தகறாறு முற்றி வெட்டு குத்து என்றாகி இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் கலைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் கலைச்செல்வன் தரப்பில் அளித்த புகாரை போலிசார் கண்டுகொள்ளவில்லையாம்.
இந்நிலையில் கலைச்செல்வனின் மனைவி உஷாராணி வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த சண்டைக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தான் முக்கிய காரணம்.
என் கணவர் கலைசெல்வம் முப்பது ஆண்டுகளாக இயக்கம் வாயிலாக மக்கள் பணியாற்றி வருகிறார்.
ஆனால் வேல்முருகன் ஒன்றியத் தலைவரான என் கணவருக்கு தெரியாமல் ஒன்றியத்தில் வேறு நபருக்கு போஸ்டிங் கொடுக்கிறார்.
எதற்காக அப்படி செய்தார் என்று தெரியவில்லை. பணமா? ஜாதி பார்கிறாரா? என புரியவில்லை. நாங்கள் பட்டியலினத்தவர் என்பதால் அவர் அப்படி செய்கிறாரா என்று சந்தேகம் வருகிறது.
பல ஆண்டுகளாக இந்த வேல்முருகன் என் கணவருக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறார். இந்த தகவல் தலைமையின் பார்வைக்கு சென்றதும், புஸி ஆனந்த் என் கணவரையும், வேல் முருகனையும் அழைத்து பேசினார். என் கணவர் கலைச்செல்வனை விட்டுவிட வேண்டாம், அவர் நீண்ட காலமாக இயக்கத்தில் உள்ளார் என்று சமரசம் செய்து வைத்திருக்கிறார்.
ஆனாலும் கூட புஸி ஆனந்த் அவர்களின் சமரசத்தை மீறி இங்கு மோதல் உண்டாகிவிட்டது. அதற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தான் காரணம். இதில் தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் என் கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் தான் போலிசாருக்கு பிரஷர் கொடுத்தார் என்று பலரும் சொல்கிறார்கள் என்றார்.
இதனால் தான் கலைச்செல்வன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துவிட்டு கலைச்செல்வம் தரப்பில் அளித்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இது குறித்து தான் உஷாராணி எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து சிலர் தெரிவிக்கையில், கட்சி தொடங்கி இன்னும் அதன் நடவடிக்கையை தொடங்கவில்லை அதற்குள் வெட்டுக் குத்து போலிசுக்கு சிபாரிசா என்கிறார்கள்.
வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் இது குறித்து என்ன சொல்கிறார் என்பதை அறிய முற்பட்டோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.