சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக குண்டர் தடுப்பு சட்டம் போட்டது ஜனநாயக படுகொலை! - வழக்கறிஞர் பாலு பேட்டி!

சவுக்கு சங்கர் மீது இரண்டாவதாக குண்டர் தடுப்பு சட்டம் போட்டது ஜனநாயக படுகொலை! - வழக்கறிஞர் பாலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,

  சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டம் போட்டது ஜனநாயக படுகொலை - பொய்கையில் பாமக செய்திதொடர்பாளர் பாலு பேட்டியின் போது சொன்னார்.

 வேலூர்மாவட்டம், பொய்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு நிர்வாகிகளை நியமிப்பதற்கான முதற்கட்ட பணியை தொடங்க் தலைமை அறிவுறுத்தியது.

  அதன் பேரில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் இதற்கான கூட்டம் நடந்தது.

   இதில் பாமக செய்திதொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மொகைதீன்,சமூக முன்னேற்ற சங்கம் பொன் மலை மற்றும் பாமக மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம்,பாமக மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,அமைப்பு செயலாளர் செங்குட்டுவன், ரஞ்சன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முன்னதாக பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்றைய தினம் தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகில் தங்கள் பகுதியில் மதுக்கடையை அமைக்க வேண்டுமென பெண்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   இது எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மது அருந்த 20 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது சந்துக்கடைகளும் அதிகம் உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் மதுகடை வேண்டுமென  போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழக அரசு மதுக்கடையை திறக்க கட்டிடம் கட்டி கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் இது சாத்தியமில்லை. என்பதால் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து பெண்களை சந்து கடைகள் நடக்கிறது. சந்துகடைகளை மூட போராட்டம் நடத்துவதாக தவறான தகவலை வழங்கி அழைத்து அந்த மக்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

 இப்போது திமுக ஜாதி வாரி கணக்கெடுப்பில் தடுமாற்றத்தில் உள்ளனர். மாநில அரசு இதனை நடத்த முடியாது மத்திய அரசு தான் நடத்த வேண்டுமென சொல்வது சமூக நீதிகொள்கையில் தவறான வழியை கடைபிடிக்கின்றனா என்றே அர்த்தம்.

¢ நான் தமிழக முதல்வரை பார்த்து கேட்பது முதல்வர் நீங்கள் இட ஒதுக்கீடு தருவதாக நடத்திய நாடகத்தை நாங்கள் நம்பிவிட்டோம். அரசாணையை இட ஒதுக்கீட்டிற்கு வெளியிட்ட அரசு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு குறித்த தரவுகளை சேகரித்தது.

  ஆனால் தமிழக அரசு எங்களின் வாழ்வாதார பிரச்சணை 21 உயிர்களை பலி கொடுத்த பெற்ற இட ஒதுக்கீடு கிடைத்தும் எங்களுக்கு பயனில்லை.

  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவண தகவலைக் கொண்டு, வன்னியர்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள் என தமிழக அரசும் முதல்வரும் மருத்துவர் ராமதாசுக்கும் எங்களுக்கும் முதல்வர் துரோகம் செய்கிறார்.

மாநில அரசுக்கு  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லை என நீங்கள் ஆலோசித்து கூறுகிறீர்கள்.       

 தற்போது 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பலமாநில உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளது. 69 இட ஒதுக்கீட்டு வழக்கில் தமிழக அரசு எந்த நிலைபாட்டை மேற்கொள்ள போகிறது.

  இதனை மிக பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக கேட்கிறோம். 69 விழுக்காடு இது ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் முதல்வரும் தமிழக அரசும் தான்.

  ஆம்ஸ்ட் ராங்க் கொலை வழக்கில் நீதி கேட்டு போராடிய அவர் மனைவி குழந்தை மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை அளித்த தகவல் தான்.

 அதற்கு பிறகு தான் குழந்தையின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர் சட்டம் என்பது எங்களின் மறைந்த காடு வெட்டி குரு மீது பல குண்டர் சட்டம் போடப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு குரு வெளியில் வந்தார். அதே போல்  தற்போது சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டங்கள் அடுத்தடுத்து போடப்படுகிறது இது ஜனநாயக படுகொலை என்று சொன்னார்.