ஓட்டல்கள் திருமண மண்டபங்கள் வேறு எங்கும் குப்பைகள் போட்டாலும் அபராதம் விதிக்கிறோம்! கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கால்வாய்களில் நீர் கலந்து வெளியேறாததால் போக்குவரத்து பாதிப்புமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிபட்டனர். இதையடுத்து பழையகாட்பாடி, முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தண்ணீர், ஜேசிபி லாரிகள் வைத்து மோட்டார் மூலம் அகற்றம் - மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. குறிப்பாக வேலூர் மாநகர் முழுவதும் மழை நீருடன்கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்க கூட தயங்குகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் நீர் வெளியே செல்ல வழி இல்லாத நிலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கனரக வாகனங்கள் மழை நீரில் சிக்கி அங்கங்கே நின்றதால் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும்,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முதல் பழைய காட்பாடி வரை சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் மாணவர்களும் தவித்தனர்.
இதே போன்று காட்பாடி கிளிதாண்பட்டறை பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம் முழுவதும் மழைநீரானது தேங்கி நின்றது இதனை அடுத்து வருவாய்த்துறை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மோட்டார்களை கொண்டு சாலைகளிலும் வீடுகளுக்கும் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றினார்கள்.
இப்பணியினை பழையகாட்பாடி,முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் மாநகராட்சி ஆணையர் ஜானகி,மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் இருந்தனர்
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கூறுகையில் நேற்று காட்பாடி உட்பட்ட பகுதிகளில் ஒரே இரவில் 14 சென்டி மீட்டர் மழை பெய்தது. நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தனர்.
சித்தூர் பேருந்து நிலையம் அருகில் பணிகள் நடப்பதால் மழைநீர் தேங்குகிறது பணிகள் நிறைவடைந்தால் மழைநீர் தேங்காது. பள்ளமாக வீடுகளில் மழைநீர் செல்கிறது ரயில் நிலையம் அருகிலிருந்து மழைநீர் வீடுகளுக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரக பகுதிகளில் இரண்டு மாதங்கள் முன்னர் தூர்வாரி பணிகள் முடிந்துள்ளது. நகர்புற பகுதிகளிலும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது குப்பைகளை வீடுதோறும் சேகரிக்கிறோம் ஓட்டல்கள் திருமண மண்டபங்கள் வேறு எங்கும் குப்பைகள் போட்டாலும் அபராதம் விதிக்கிறோம். (பாலாற்றில்?)
கோழி இறைச்சி கடைகளுக்கும் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கிறோம். பிளாஸ்டிக் குப்பைகளால் தான் கால்வாய்கள் அடைத்து பிரச்சனைகளாகிறது. பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிந்தவுடன் மழைநீர் எங்கும் தேங்காது இந்த மழை இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்தோம்.
மழையால் உயிர் சேதம் பொருட் சேதமில்லை. ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடிகால் அடைப்புகளால் ஆங்காங்கே தேங்கியது வரும் காலங்களில் கால்வாய்கள் சரி செய்யபடும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் பருவ மழை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்துறைகளும் தயார் நிலையில் உள்ளனர்.
உடனடியாக வேலைகளை செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் அனைக்கட்டு குடியாத்தம் பகுதிகளில் மழையால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என சொன்னார்.