ஓ..... மூத்த வழக்கறிஞருக்கு பதவி கொடுக்கக் கூடாது என்றே அந்தப் பெண் எம்பி டிராமா போட்டாரா?!

ஓ..... மூத்த வழக்கறிஞருக்கு  பதவி கொடுக்கக் கூடாது என்றே அந்தப் பெண் எம்பி டிராமா போட்டாரா?!

ம.பா.கெஜராஜ், 

மூத்த வழக்கறிஞருக்கு மாநிலங்களவை பதவி? அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கு தடை போடவே தாக்குதல் டிராமா போட்ட பெண் எம்பி! 

 தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, 'டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்' எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது.

 பின்னர் போலிசார் ஸ்வாதி மாலிவாலிடம் விசாரணை நடத்தி டெல்லி போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பதாவது, "அரவிந்த் கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் உள்ளே வந்தார். திடீரென்று, அவர் என்னைத் தாக்க ஆரம்பித்தார். நான் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும் போது அவர் என்னை 7 முதல் 8 முறை அறைந்தார்.

  அவர் என் மீது பாய்ந்தார். மிருகத்தனமாக இழுத்து, வேண்டுமென்றே என் சட்டையை மேலே இழுத்தார். அவர் என் மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உதைத்தார்.     மீண்டும் மீண்டும் முழு பலத்துடன் என்னைத் தாக்கினார்' என கூறியிருந்தார்.

 அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியார் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது 16-05-24  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

  இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சமயம்  ஸ்வாதிமாலிவால் அரவிந் கெஜ்ரிவால் வீட்டிலிருந்து எந்த காயமும் இன்றி நல்லபடியாக நடந்து செல்வதற்கான ஆதாரங்கள் வெளியாகின.

  ஆனால் அது சித்தரிக்கப்பட்டது என்று ஸ்வாதிமாலிவால் தரப்பில் சொல்லப்பட்டது.

  இதன் பின்னணி குறித்து விசாரித்த போது அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி அரவிந்த் கெஜ்ரிவாலை மிகவும் சாமர்த்தியமாக வாதாடி அவருக்கு ஜாமின் பெற்று தந்துள்ளார். அதே போல் மணீஷ் சிசோடியாவுக்கும் அவரே ஜாமின் பெற்று தந்தார்.

ஆகவே வழக்கறிஞர் அபிஷேக் சிங்விக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கலாம் என்று ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்தது.

  அதற்கு வசதியாக, ஏற்கனவே ஆமா ஆத்மி சார்பாக மாநிலங்களவை எம்பி பதவி அளிக்கப்பட்டிருக்கும் ஸ்வாதி மாலிவாலின் பதவிக்கு தலைமை குறிவைத்தது.

  இதற்கு இசைவு தெரிவிக்காத ஸ்வாதி, தன்னை உதவியாளர் தாக்கினார் என்று இப்படி டிராமா போட்டு ஊரை கூட்டி வருகிறார்.

 ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சனையை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக வினர் கையிலெடுத்து கூவிக்கொண்டிருக்கின்றனர்.