சுப்ரிம் கோர்ட்-சுப்ரிம் கோர்ட்-சுப்ரிம் கோர்ட்!!எடப்பாடியின் முறையீடுகள்!

சுப்ரிம் கோர்ட்-சுப்ரிம் கோர்ட்-சுப்ரிம் கோர்ட்!!எடப்பாடியின் முறையீடுகள்!

ம.பா.கெஜராஜ்,

 எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையிடவுள்ளதாக கூறப்படுகிறது.

 ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெற உள்ளதாக தெரிகிறது.  அதற்கான பணிகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. கூடவே  பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தலைமை நிலையத்தின் பெயரில் இப்படி அழைப்பிதழ் அனுப்பிவைப்பது சட்டவிரோதம் என ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்தியலிங்கம் காட்டு கத்து கத்தியும் அந்த குரலை புறம் தள்ளி பணிகள் நடந்து வருகின்றன. 

 கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற  அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

  இந்த சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

 அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் இன்று முறையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தது. குறிப்பிடத்தக்கது.