ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில் புயல் நிவாரணம்!

கு.அசோக்,
அரக்கோணம் ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில், ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட மக்களுக்காக போர்வை பிஸ்கட் பாக்கெட் ஆகியவை அரக்கோணம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாகவும் அதேபோல் கடும் குளிர் காரணமாகவும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக போர்வை மற்றும் பாய் ஆகியவை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கி வரும் விடுதியில் போர்வை வழங்கப்பட்டது. மேலும் அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி நாராயணா கேட்டுக்கொண்டதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக போர்வை மற்றும் பிஸ்கட் பெக்கெட் வட்டாட்சியர் ஸ்ரீதேவியிடம் வழங்கினர். இதில் அரக்கோணம் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.