சிறுவன் கையை வெட்டிய முகமுடி நபர்!

சிறுவன் கையை வெட்டிய முகமுடி நபர்!

கு.அசோக்,

முக மூடி அணிந்து திருட வந்த மர்ம நபர் சிறுவனை வெட்டியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

 இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் வயது (41) ராணுவ த்தில் பணிபுரிந்து வருகிறார்.  அவரது வீட்டில் மனைவி அலமேலு மற்றும் மகன் சோனு உள்ள நிலையில் காலை முக மூடி அணிந்து வந்த நபர் வீட்டில் இருந்த மகனின் கைத்தில் கதியை வைத்து நகைகளை கொடுக்குமாறு மிரட்டி உள்ளான்.

  இவர்கள் கூச்சலிட்ட உடன் மகனின் கையை வெட்டிவிட்டு அலமேலுவையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறுகின்றனர்.

  இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்  ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  அவர்கள் கூறுகையில், தொடர்ச்சியாக கஞ்சா போதையில் இந்த பகுதியில் வாலிபர்கள் அச்சுறுத்தல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 மேலும், தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

   இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.