பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை தவறாக பயன்படுத்துவதா?

எம் .ரபிக் ராஜா
பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில், தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் பொருட்கள் வைப்பறையாக பயன்படுத்தி வருகிறார்
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக புறகாவல் நிலையம் அமைப்பது, சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் தரம் உயர்த்தி மறு சீரமைப்பு பணிகள் சுமார் 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அப்பணிகள் தற்போது ஏதோ நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்படி புதிய பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.
அப்படியிருக்க புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேருந்து நிலையத்தில் பணிகள் தொடங்கிய நாள் முதலே தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் அவரது அலுவலகம் மற்றும் பொருட்கள் வைப்பறையாக பயன்படுத்தி வருகின்றார்.
மேலும் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் இருக்கும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருவதால் ஏராளமான தாய்மார்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இந்த தனியார் ஒப்பந்ததாரருக்கு, பல்வேறு வகையான முறைகேடுகளுக்கும் துணையாக ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்களும் பின்புலமாக இருந்து செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் பெண்களுக்காக பிரத்தியோகமாக ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை என்று ஒன்றை உருவாக்கி கொடுத்தார் ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.