கொலைகாரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கொலைகாரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கு.அசோக்,

திமிரி பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞரை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு வந்த ஆற்காடு மோசூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் வினோத் (24) என்பவரை திமிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   மேலும் கொலை செய்யப்பட்ட குற்றவாளியின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்திரவிட்டத்தின் பேரில் வினோத் என்பவரை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தர்.

பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான உத்தரவினை ஆட்சியர் வழங்கினார்.