கிருபானந்தவாரியாரின் பிறந்த நாளை அரசு சரியாக கொண்டாடவில்லை அதிமுக குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,
ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து கிருபானந்த வாரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்- ஆனால் இந்த விழா முறையாக கொண்டாடப்படுவதில்லை என அதிமுக குற்றச்சாட்டு கூறி இருக்கிறது.
வேலூர்மாவட்டம்,காட்பாடி, காங்கேயநல்லூரில் அமைந்துள்ள திருமுருக கிருபானந்த வாரியார் ஞான வளாகத்தில் அவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிருபானந்த வாரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.
கிருபானந்த வாரியாரின்அலங்கரிக்கப்பட்ட சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில் ,மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.
பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
பின்னர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அப்பு, மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் திருமுருக கிருபானந்த வாரியாரின் சிலைக்கு மலர்தூவியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தான் வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திமுக அரசு இந்த விழாவினை அரசு விழாவாக முறையாக நடத்தவில்லை என குறை கூறினார் .