ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட வைக்கும் வாலாஜா நகராட்சி நிர்வாகம்!

ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட வைக்கும் வாலாஜா நகராட்சி நிர்வாகம்!

கு.அசோக்,

வாலாஜா  அருகே 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளால் மக்கள் கடும் அவதி.... விரைந்து முடிக்க கோரிக்கை.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா  நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு சார்ப்பான தெருவில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது.

 இதற்காக இருபுறமும் பள்ளங்கள் எடுக்கப்பட்டு அந்த மண் தெருவின் நடுவிலே கொட்டப்பட்டுள்ளது.

இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றசாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக வீடுகளில் இருந்து குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் என வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் தெருவில் நடக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக  கூறுகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பல நாட்களாக சின்டெக்ஸ் டேங்க் இல்லாத நிலையிலும் அதேபோன்று வீடுகளுக்கு மேல் செல்லும் மின்சார ஹெவி ஒயர்கள் மாடிகளில் கை எட்டும் அளவிற்கு இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். 

எனவே வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை கூடிய விரைவில் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்