பாஸ்டருக்காக குழந்தையை கடத்திய பெண் , சிறுவன் உள்ளிட்டவர்கள் கைது! எஸ்பி மணிவண்ணன் அதிரடி!

பாஸ்டருக்காக குழந்தையை கடத்திய பெண் , சிறுவன் உள்ளிட்டவர்கள் கைது! எஸ்பி மணிவண்ணன் அதிரடி!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .. நெ.மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் 24 மணி நேரத்தில் குழந்தை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை கடத்தல் சம்பவத்தில் பெண் மற்றும் சிறுவன் உட்பட உள்பட சிலரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சின்னு என்கிற பெண்ணுக்கு கடந்த 27ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த வெயில் அந்த குழந்தை கடத்தப்பட்டது. 

குழந்தையை இடையஞ்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா கொண்டு வந்த கைப்பையில் வைத்து கடத்தி செல்வது மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

  இந்த காட்சிகளைக் கொண்டு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு  தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜெயந்தி மாலா பச்சிளம் குழந்தையை கடத்தி பாஸ்டர் செல்லதுரை சாலமன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவியிடம் கொடுத்ததாகவும், அந்த குழந்தையை அவர்கள் பெங்களூருக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்தது.

உடனே வேலூர் டிஎஸ்பி தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு பெங்களூருக்கு விருந்தினர். 

பின்னர் சிக் பெல்லாப்பூர் பகுதிக்கு சென்று குழந்தையை மீட்டு தற்போது அரசு மருத்துவமனையில் இருந்த குழந்தையின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் சிறுவன் உள்ளிட்டவர்களை கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.