சொத்தை விற்க ஆள்மாறாட்டம்:- இருவர் சிக்கினர்!

சொத்தை விற்க ஆள்மாறாட்டம்:- இருவர் சிக்கினர்!

 தி.வினோத்,

  மற்றவர் சொத்தை ஆள் மாறாட்டம் செய்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சூரியநகரம் கிராமத்தில் 97 சென்ட் நிலம் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ளது. இந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க திட்டமிட்டிருந்தார்.

  இதை தொடர்ந்து நேற்று சூரியநகரம் கிராமத்தில் சீனிவாச ஆச்சாரி பெயரில் உள்ள நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 2 பேர் வந்திருந்தனர். அப்போது திருத்தணி சார்பதிவாளர் அஸ்வினி விற்க வந்த நபரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து உங்கள் பெயர், தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

  அப்போது அவர் தன்னுடைய பெயர் சீனிவாசா ஆச்சாரி என்றும் தந்தை பெயரை பதிலளிக்கதிக்குமுக்காடினார்.

ரப்போது அவர் அருகில் இருந்த சரவணன் என்பவர் சீனிவாச ஆச்சாரியின் தந்தை பெயரை தட்டு தடுமாறி சொன்னார். தந்தை பெயரை சொல்லரிப்படியாக திக்குமுக்காடுவது என சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் அஸ்வினி அவரது கைரேகையை பரிசோதித்தார்.

  அப்போது அவை வித்தியாசப்பட்டதால், ஆள்மாறாட்டம் நடந்துள்ள உறுதியானது. உடனடியாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மற்றும் திருத்தணி போலீசாருக்கு அஸ்வினி தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த திருத்தணி போலீசார் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்ய வந்த 2 பேரை போலிசில் சிக்கினர்.