கார் ஸ்டேண்டை அகற்றிய அதிகாரிகள்!

கார் ஸ்டேண்டை அகற்றிய அதிகாரிகள்!

 க.பாலகுரு,

  புதிய ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வந்த வாடகை கார் நிறுத்தம் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமூகமாக அகற்றப்பட்டது.

   திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே வாடகை கார் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 15 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயங்கி வருகிறது.சாலை விரிவாக்க பணிகளுக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்த  கார் நிறுத்தம் அகற்றுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 இந்நிலையில் இன்றைய தினம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் கார் நிறுத்தம் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

  இதற்கு கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வேறு இடத்தில்  கார் நிறுத்தம் அமைத்து தருவதற்கான இடம் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் டாக்ஸி ஸ்டான்ட் சுமுகமாக அகற்றப்பட்டது.