ஆச்சரியம் ஆனால் உண்மை....விருது பெற்ற திமுக நகர மன்ற தலைவரை பாராட்டி விழா எடுத்த அதிமுக கவுன்சிலர்கள்!

ஆச்சரியம் ஆனால் உண்மை....விருது பெற்ற திமுக நகர மன்ற தலைவரை பாராட்டி விழா எடுத்த அதிமுக கவுன்சிலர்கள்!

க.பாலகுரு,

திருவாரூர் நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக மாற்றுவதற்கு முழு முயற்சி எடுத்து வரும் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழகத்தில் சிறந்த நகராட்சிக்கான விருதை திருவாரூர் நகராட்சி தேர்வுபெற்றது. 

இதற்கான விருதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் திமுகவை சேர்ந்த திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்திலுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சியில் அதிமுகவை சேர்ந்த ஒன்று  மற்றும் இரண்டாவது வார்டுகளை சேர்ந்த கலியபெருமாள், மலர்விழி தம்பதியினர், ஏழாவது வார்டு திமுக உறுப்பினர் வரதராஜன் இணைந்து நகர மன்ற தலைவருக்கு பாராட்டு விழா நடத்தினர்.

தொடர்ந்து நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்திலுக்கு சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 

மேலும் தொடர்ந்து சிறந்த நகராட்சியாக தொடர்வதற்கு தங்களது பங்களிப்பு இருக்கும் எனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கலியபெருமாள் தெரிவித்ததாவது,

சிறந்த நகராட்சி விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றி.l

கடுமையான நிதி நெருக்கடியான காலகட்டத்திலும் போர்க்கால நடவடிக்கையில் திருவாரூர் நகராட்சி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 

 பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக கொண்டு வருவதற்கு முழு முயற்சி எடுத்து வரும் நகர மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் வார்டு பகுதிக்கு உட்பட்ட நகர் நல சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.