உபரி நீருக்காக சேவலை வெட்டிய கிராமத்தினர்!
கு.அசோக்,
வாலாஜா அருகே கிராமத்தில் உள்ள ஏரியல் உபரி நீரை வெளியேறுவதால் அதனை வரவேற்கும் விதமாக கிராம பொதுமக்கள் சேவலை பலி கொடுத்து மேளதாளங்கள் முழங்க படையல் வைத்து தண்ணீரில் நீராடி மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு ஊராட்சியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பெய்த தொடர் கனமழையால் காரணமாக பெரிய ஏரியானது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.
ஏரியில் இருந்து கடை வாசல் வழியாக கோடி செல்லும் உபரநீரை வரவேற்கும் விதமாகவும் கோடி செல்லும் நீரால் விவசாயம் செழித்தோங்க வேண்டும் என்பதற்காக கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் இறைவனை வேண்டி சேவலை பலி கொடுத்தனர்.
மேலும், படையல் வைத்து மேளதாளங்கள் முழங்க உபரி நீர் கோடி செல்லும் தண்ணீரில் பூ மலர்களை தூவி கோவிந்தா கோவிந்தா என முழக்கங்களை வெளிப்படுத்தி தண்ணீரை வரவேற்றனர்.
பின்னர் வெளியேறும் தண்ணீரில் கிராமத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தண்ணீரில் நீராடினர்.
தொடர்ந்து ஏரியில் கோடி வழியாக செல்லும் நீரால் சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும் எனவும் மேட்டுப்பகுதியில் உள்ள ஏரி என்பதால் இது 50 ஆண்டுகளில் 2 முறையாக கோடி செல்வதாக இதன் காரணமாக கிராமத்தில் விவசாயம் செழிதோங்கும் என்றும் நம்புகிறார்கள்.