என்னம்மா இப்படி பண்ணீட்டீங்க?

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதின் முன்பு விட்டு சென்ற தாய். காவல் துறையினர் குழந்தைகளை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெருமாள்பேட்டை பகுதியில் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு கருணை இல்லம் விடுதியின் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு பகுதி மக்கள் அங்கே சென்று பார்த்த போது அங்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் இரு பெண் குழந்தைகளை மீட்டு தற்காலிகமாக கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷிடம் ஒப்படைத்தனர்.
பெண் குழந்தைகளை விட்டு சென்ற பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை தொடங்கினர்.அப்போது போலீஸார் அங்குள்ள சிசி டிவி பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் ஒரு ஆண், குழந்தைகளை கருணை இல்லம் முன்பாக விட்டு சென்றதும், சற்று தூரத்தில் ஒரு பெண் நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீஸார் பெண் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு கைப்பை கைப்பற்றினர். அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது குழந்தைகளின் பாட்டி செல்போன் என்று தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீஸார் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் குழந்தைகளின் தந்தை ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ்(33) மற்றும் அவரது உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
விசாரணையில் ராஜேஷ் கூறியதாவது நேற்று மதியம் முதல் தன்னுடைய மணைவி ஜோதி(23) மற்றும் இரு பெண் குழந்தைகள் பூர்த்தி வந்தனா(2), பிருந்தா(1) ஆகியோர் காணவில்லை என்று பல இடங்களில் தேடி வந்ததாகவும், தாய்யை குழந்தைகளை கருணை இல்லம் அருகில் விட்டு சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.