ஆட்சியர்-டிஐஜி-கல்லூரிகளில் ஆய்வு!

ஆட்சியர்-டிஐஜி-கல்லூரிகளில் ஆய்வு!

 கு.அசோக்,

வேலூர் பிள்ளையார்குப்பத்தில் துவங்கப்பட்டுள்ள மாதிரி பள்ளியை மாவட்ட கண்கானிப்பு அதிகாரி லட்சுமி பிரியா மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

 வேலூர் மாவட்டம்,பிள்ளையார்குப்பத்தில் அரசு மாதிரி பள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது இதில் 80 மாணவ,மாணவிகள்  தனித்தனி விடுதி வசதிகளுடன் துவங்கப்பட்ட இப்பள்ளியில் டிஜிட்டல் தோடு திரை போர்டுகள் மூலம் பாடம்கற்பிக்கப்பட்டு வருகிறது.

   மேலும் இந்த மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணை பெறவும் ஐ.ஐடி, நீட் போன்ற தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறவும் இங்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் மாணவ, மாணவிகள் பாடம் கற்பிக்கப்படுவது குறித்தும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா மாணவர்கள் விடுதி மாணவிகள் விடுதிகளில் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முறையாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி லட்சுமி பிரியா மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இருந்தனர்.