வேலூர்:- கொரோனா தடுப்பு நடவடிக்கை!

ஜி.கே.சேகரன்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் - கோடைமழையால் சேதமடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுக்கப்பட்டு வருகிறது - ஆட்சியர் சுப்பு லெட்சுமி தொரப்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் தந்தை பெரியார் ஈ. வே. ரா. அரசுபல்தொழில்நுட்பக் கல்லூரியில் ரூபாய் 233.13 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள் 2 கழிவறைகள் பணிகளுக்காக காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதனை அடுத்து நடந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பூமி பூஜையில் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர், ஒவ்வொரு வாரமும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்கின்றோம்.
ஹீட் ஸ்ட் ரோக் குறித்தும் கலந்தாய்வு செய்துள்ளோம் கோவிட் குறித்து அரசிடமிருந்து என்ன வழிகாட்டுதல் வருகிறதோ அதன் படி நடவடிக்கை எடுப்போம்.
மருத்துவர்களும் நம்முடைய மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர் அரசு உடனுக்குடன் கோடை மழையால் பயிர்கள் பாதிப்பு வாழைமரங்கள் இடிந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பயிர்கள் குறித்தும் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைதுறையினர் கணக்கிட்டு அறிக்கை அளிக்கின்றனர்.
சதுப்பேரி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடத்தி அவர்களுக்கு மாற்று நடவடிக்கை என்ன செய்வது என்பது பின்னர் தெரியவரும் என்று சொன்னார்.