காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்! ஆனால் ஏன் நாம் இதை செய்தோம் என ஃபீல் பண்ணுவீங்க! திருப்பத்தூர் ஆட்சியரின் சூப்பர் ஸ்பீச்!!

காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்! ஆனால் ஏன் நாம் இதை செய்தோம் என ஃபீல் பண்ணுவீங்க! திருப்பத்தூர் ஆட்சியரின் சூப்பர் ஸ்பீச்!!

 ஆர்.ரமேஷ்,

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்புடன் பொது சுகாதார மணவர்களிடையெ மனநல விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவர்களின் மனநல அழுத்தத்தை போக்கும் விதமாக அத்துரையின் மனநல மருத்துவர் டாக்டர் பிரபவராணி அவர்கள் மன அழுத்தத்தை பற்றி மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.மாரிமுத்து அவர்கள் சிறிய வயதில் திருமணம், கருக்கலைப்பு போன்ற தவறான நடவடிக்கையின் வாயிலாக இளம் வயது பெண்கள் அதிக இறப்புகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் மாணவிகளாகிய தாங்கள் வசிக்கக்கூடிய இடங்களில் இது போன்ற இளம் வயது திருமணம், கருக்கலைப்பு நடைபெறுகின்றதை 1098 என்ற இலவச எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம், மேலும் மன அழுத்தம் உள்ள இளம் சீரார்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குறித்து 14416 என்ற என்னையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

  தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தொடர்ந்து மனநலம் குறித்த உறுதிமொழியினை மாணவிகள் அனைவரும்  ஏற்றுக்கொண்டனர்.

  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

கல்வி பயின்ற காலகட்டங்களில் காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும், புரிந்து கொண்ட பிறகு ஏன் நாம் இதை செய்தோம் என்ற இருக்கும். அதன் பிறகு அதில் இருந்து வெளியே வருவது மிகவும் பிரச்சனைக்குரியது. இதிலிருந்து வெளியே வர நமது பெற்றோர்களிடம் தெரிவித்து அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர முயல வேண்டும். மேலும் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனை பகிர்ந்து கொள்வதில் மிக முக்கியமானவர்கள் நமது பெற்றோர்.

   பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுகின்ற பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். எந்த ஒரு பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு பயந்தால் அடுத்த தவறுகளை செய்ய நேரிடும். அனைவரும் வெள்ளை நிறத்தில் இருந்தால் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்தால் அவரை நாம் அறிவாளி என்று நினைக்கின்றோம்? அதைப்போல மனித தோல் நிறம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் அந்த தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு நமக்கு தோல் நிறம் மாறும். உலகத்தில் அனைவரிலும் நான்தான் அழகு என்று நினைக்க வேண்டும். கண்ணாடி முன்பு நம்மை நாம் ரசிப்பது மட்டுமல்ல நமது தன்னம்பிக்கையையும் உணர முடியும்.

 அனைவரும் அழகாக உடை அணிவதற்கு முக்கிய காரணம் நம்மை நாம் நம்பிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்தான் தற்கொலை செய்து கொள்வதில்லை. தற்கொலை செய்து கொள்பவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த நபருக்கு தண்டனை கொடுப்பதாக நினைக்கிறார்கள், அது அப்படி அல்ல அந்த நபர் பிரச்சனை இத்துடன் முடிந்து விட்டது என்று அடுத்த வேலையை பார்த்து கொண்டு செல்வார்கள். எனவே இதற்கான தீர்வு தாய், தந்தையர் மற்றும் நண்பர்கள் மூலமாக தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் இன்பவள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.