இளம் பெண்ணின் புகாரை பெற அலைகழித்த அரக்கோணம் போலீசார்! அடுத்தவருக்கு விருந்து படைக்க முயன்ற திமுக பிரமுகர்  நீக்கம்!

கு.அசோக்,

 அரக்கோணம் அருகே கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திமுக நிர்வாகி மீது புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாணவி குமுறுறிய நிலையில் சம்மந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட்டிருக்கிறது தலைமை.

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் பகுதியைச் சேர்ந்த பலராமன் பவானி தம்பதிகளின் இளைய மகளான ப்ரீத்தி 21, ஆட்டுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

 இந்நிலையில் அவர் பல்வேறு இடங்களில் புகார் மனு ஒன்றை அளித்தார். குறீப்பாக அதிமுகவைச் சேர்ந்தவர்களை சந்தித்து புகார் சொன்னார்.

 அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வ சாயல் என்பவர் திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

அவருக்கு திருமணம் ஆகிய நிலையில் தன்னை ஏமாற்றி காதலிப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோவிலில் பெரியோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும், மார்ச் மாதம் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் திடீரென தெய்வச்சாயல் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இறையாக்க முயற்சித்ததாக ப்ரீத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

   இந்த செயலுக்கு ப்ரீத்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தினந்தோறும் கடுமையாக தாக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

   இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி தெய்வ சாயல் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பிரீத்தி தற்கொலைக்கு முயன்று முதற்கட்டமாக அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் அதனை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்தார்.

  மேலும் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறையினர் எவ்வித விசாரணை மேற்கொள்ளவில்லை என ப்ரீத்தி கூறியுள்ளார்.

  அதனைத் தொடர்ந்து ப்ரீத்தி தன்னுடன் வரவில்லை என்றால் ப்ரீத்தியின் பெற்றோர்களை வாகனம் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி பலமுறை தன்னுடன் வாழ அழைத்துச் சென்றதாகவும்,

  கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பிரீத்தி நிரந்தரமாக தனது தாய் வீட்டிற்கு வந்து தன்னுடைய கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

   இருப்பினும் தெய்வ சாயல் ப்ரீத்தியை விடாமல் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது தங்களுடைய எல்லை இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லாத காரணத்தினால் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  ஆனால் அரக்கோணம் நகர காவல் நிலையத்திலும் தான் அலை கழிக்கப்பட்டதாக கூறி நேரடியாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடியுள்ளார்.

அங்கு புகார் மனு பெறப்பட்டு மீண்டும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  இதுபோன்று தொடர்ந்து புகார் மனு பெறாமல் மாணவி பிரீத்தி அலை கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

  அதனைத் தொடர்ந்து மாணவி பிரீத்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

  இந்த பிரச்சனையை கெட்டியாக பிடித்துக் கொண்ட அதிமுகவினர் இதற்காக ஒரு போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.

  இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தெய்வா (எ) தெய்வ செயலை திமுக வில் அவர் வகித்து வந்த இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய  ஒன்றிய  இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கி அவருக்கு மாற்றாக ம.கவியரசு என்பவருக்கு அந்த பதவியை வழங்கியிருக்கிறார்கள்.

  எல்லாம் சரிதான், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு போனால் அவர்களை பச்சாதாபமே இல்லாமல் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைய வைப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கும் சில காவல் அதிகாரிகளுக்கு என்ன பனிஷ்மென்ட்டோ?