கலெக்டரிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அலுவலர்கள்!

ஜி.கே.சேகரன்
கிராமப்புறங்களில் கழிவறைகள் அமைத்தல் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால் அதனை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பேசினார்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இதில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கு கிராமப்புற சுகாதாரமேம்பாடு திட்டத்தின் மூலம் கழிவறைகளை கட்ட ஒப்பந்தம் எடுக்கப்பட்டும் பெரும்பாலான பணிகள் நடக்கவில்லை. கழிவறைகளும் கட்டப்படவில்லை.
அதே போல் கிராம பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களும் அமைக்க ஒப்பந்தங்களை எடுத்தும் அப்பணிகள் நடக்கவில்லை, இதனால் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பணிகள் மந்த கதியில் நடக்கிறது, அப்படியெல்லாம் மந்தமாக செயல்படக்கூடாது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரையை கூறி பேசினார்.