ஒருதலைப் பட்சமாக செயல்படும் வேலூர் மாவட்ட போலிசார்!

கு.அசோக்,
காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வேலூர் மாவாட்டம், கே.வி.குப்பம் தாலுகா, கெம்மங்குப்பம் கிராமத்தில் நிகழ்ந்த கோயில் பிரச்னையை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஓப்படைக்க நேற்று வந்தனர்.
இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு அளித்து பிரச்னையை தீர்த்தக்கொள்ளுமாறு கூறினார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,கடந்த மாதம் எங்கள் ஊருக்கு வந்த போலீசார், எங்கள் ஊரில் உள்ள காளியம்மன் கோயில் சம்பந்தமாக, மற்றொரு பிரிவினர் புகார் செய்துள்ளதாகவும், விசாரணைக்காக ஊர் பிரமுகர் 10 பேர் வரும்படி அழைத்தனர்.
அதன்படி நாங்களும் விசாரணைக்கு சென்றோம்.அங்கு, காளியம்மன் கோயில் புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ளதாகவும், அதனால் மற்றவர்கள் வழிபடுவதை தடை செய்யக்கூடாது என எங்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் அந்த கோயில் தனிநபரின் பட்டா நிலத்தில் உள்ளது. இக்கோயிலுக்கும் ஊருக்கும் சம்பந்தமில்லை. கோயில் தொடர்பாக நாங்கள் எதுவும் கூற மாட்டோம் எனக்கூறி விட்டு வந்தோம்.
இந்நிலையில் கோயிலின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாக ஒருவர் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.இந்நிலையில் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர், இந்த நிலம் விஷயத்தில் சம்மந்தமே இல்லாத எங்கள் ஊரை சேர்ந்த மக்களை, தினம் அமைதி குழுவிற்கு வரவேண்டும் என அழைத்து அலைக்கழிக்கின்றனர்.
பெரும் அளவில் கூலி தொழிலாளிகள் உள்ள எங்கள் கிராம மக்களை சம்மந்தமே இல்லாத விஷயத்தில் புகுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.
எனவே விசாரணை குழுவில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தையன், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். ரிதே போல் தான் குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட மேல்பட்டி காவல் நிலைய அதிகார எல்லையில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அடுக்கம்பாறை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை இது தொடர்பாக வழக்கு ஏதும் பதியவில்லை.
ஸ்டேட் மென்ட் எடுக்க வந்த போலிசார், சாடிகளிடம் தவறாக வழிகாட்டியிருக்கிறார். இது தான் இங்குள்ள போலிசாரின் லட்சணம்.