நகரத்தை இணைக்கும் பேருந்துகள் கூடுதலாக வேண்டும்!

நகரத்தை இணைக்கும் பேருந்துகள் கூடுதலாக வேண்டும்!

 கு.அசோக்,

  வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் தடம் எண் 9, பேருந்து இயக்கப்பட்டு வருகிறாது.

 அதில்  காட்பாடி முதல் லத்தேரி, கே வி குப்பம், குடியாத்தம் வரை இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

  வேலைக்கு செல்வோ£,¢ பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் இவ்வழியாக வரும் பேருந்தில் தான்  பயணிக்க வேண்டிய சூழ் நிலை உள்ளது.

 ஆனால் அதற்கு தகுந்தாற் போல பேருந்து எண்ணிக்கைகள் இந்த ரூட்டில் இல்லை. இந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின்,  கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு இணைக்கக்கூடிய பேருந்து இதுவாகும்.

  இந்த நிலையில் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிவதால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டும்,  ஜன்னலை ஆதாரமாக கொண்டும்  பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

 இதனை அவ்வழியே சென்ற செய்தியாளர் ஒருவர்  பார்த்து பேருந்தின் முன்பு ஓட்டுநர் மற்றும் நடந்துநரிடம் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது குறித்து முறையிட்டார். அதற்கு  நடத்துனர் வண்டி இல்லை நான் என்ன செய்வது என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

 பின்னர் அவர் மாணவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்திவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து பேருந்து கிளம்பியுள்ளார்.

  இதனையடுத்து மீண்டும் மாணவர்கள்  படிக்கட்டில் தொங்கியவாறு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

 இதனால் மாவட்ட நிர்வாகம் இது மாதிரியான கிராமப்புறங்களில் இருந்து நகரங்கள் வரை இணைக்கும் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் அப்பொழுதுதான் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்களும் சிரமமின்றி பயணிக்க முடியும் இதுவே அப்பகுதியில் பயணம் செய்யும் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

 ஒரு பத்து பேர் மட்டும் பயணிக்கும் ரூட்டுகளுக்கெல்லாம் பேருந்துகளை விட்டு ஆட்சியாளர்களுக்கு விசுவாசம் காட்டும் போக்குவரத்து அதிகாரிகள், சீட்டில் இருந்து எழுந்து அந்த பக்கமாக எட்டிப் பாருங்கள் சார்.