தொழுநோயாளிகளை விளக்கி வைக்க கூடாது! வேலூர் கலெக்டர் உருக்கம்!

தொழுநோயாளிகளை விளக்கி வைக்க கூடாது! வேலூர் கலெக்டர் உருக்கம்!

 கு.அசோக்,

  தொழு நோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த கூடிய ஒன்று,  அதில் பாதிக்கப்பட்டவர்களை விளக்கி வைக்காமல் அனைவரும் தொழு நோயாளிகளுக்கு ஆதரவாக சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் - தொழு நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறவும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் - தேசிய தொழுநோய் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து நலத்திட்டங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

___________

  வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள நகர அரங்கில் இன்று மகாத்மா காந்தி நினைவு நாள் தேசிய தொழு நோய் தினமாக அனுசரிக்கபட்டது.

  அதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் ஏற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் பானுமதி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் கனேஷ்,.மருத்துவபணிகள் தொழுநோய் துணை இயக்குநர் பிரீத்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  பின்னர் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியர் துவங்கி வைத்து தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

  பின்னர் விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் தொழுநோய் குறித்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தொழுநோய் கண்டறியப்பட்டால் ஆரம்பகாலத்திலே சிகிச்சை எடுத்தால் முழுவதுமாக குணப்படுத்தலாம்.

  மேலும் சமூகத்திலிருந்து தொழுநோயாளிகளை விளக்கி வைக்க கூடாது சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு தொழுநோயாளிகளுக்கு ஆதரவாக மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் மேலும் அவர்கள் சிகிச்சைகள் பெறவும் வழிகாட்ட வேண்டுமென பேசினார்.