போதை ஆசாமியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி நடத்துநர்.
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே போதையில் இருந்த ஆசாமியை பேருந்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் தள்ளிவிட்ட தனியார் பேருந்து நடத்துநர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, செட்டியப்பனூர் பகுதியில் வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் குடிபோதையில் ஒருவர் பயணித்தார். அவரைப் பார்த்த பேருந்து நடத்துனர் அந்த போதை ஆசாமியை பேருந்தில் இருந்து தள்ளிவிட அந்த போதை ஆசாமி தேசிய நெடுஞ்சாலையில் தடுமாறி கீழே விழுந்தார்.
போதையில் இருந்ததாலும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரை தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் கிழே தள்ளி விட்ட சம்பவம் ஆபத்தானது என உணராமல் சாலையில் தள்ளிவிட்டது நியாயமற்ற செயல் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, சாலையோரம் தள்ளப்பட்ட அந்த போதை நபர் எழுந்து போக முடியாமல் அங்கேயே படுத்து இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இனி இதுபோல நிகழ்வதை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுக்கெல்லாம் அதிகாரிகளுக்கு நேரம் இருக்குமா பொது ஜனங்களே?