வேலூர் திருப்பத்தூர் ஆட்சியர்கள் வாக்கு செலுத்தினர்!

ஜி.கே.சேகரன்,
மக்களவை தேர்தலின் வாக்குபதிவு தினமான இன்று வேலூர், திருப்பத்தூர் ஆட்சியர்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
வேலூர் ஆட்சியர்,
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அல்லா புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் பூத் எண் 155 இல் வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி வாக்களித்தார்.
திருப்பத்தூர் ஆட்சியர்,
திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலம் கிராமம், என்.எம்.கோயில் குருமன்ஸ் வட்டம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான தர்ப்பகராஜ் நீண்ட வரிசையில் நின்று திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.