பிரச்சனைகளுக்கு நிரந்தர... தீர்வுதிருவாரூர் ஆட்சியர், நாகை வேட்பாளர் மற்றும் முதல்வரின் 101 வயது தாய் மாமா வாக்களித்தனர்!

பிரச்சனைகளுக்கு நிரந்தர... தீர்வுதிருவாரூர் ஆட்சியர், நாகை வேட்பாளர் மற்றும் முதல்வரின் 101 வயது தாய் மாமா வாக்களித்தனர்!

 க.பாலகுரு,

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் வாக்களித்த போதும் மாவட்டம் முழுவதும் வாக்கு பதிவு மந்தமாக இருந்து வந்தது. பின்னர் பிற்பகலில் மக்கள் வாக்களிக்க வரிசைகட்டினர்.  

 திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ அவருடைய ஜனநாயக கடமையாற்றும் வகையில் வாக்களித்தார்.

அதே போல்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கமுககுடி கிராமத்தில் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் வாக்களிப்பதற்கு முன் மந்தமாக இருந்த வாக்குபதிவானது பின்னர் விரு விருவென்று நடைபெற்றது.

முதல்வரின் 101 தாய் மாமா.

101 வயதில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா - இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என பேட்டி.

 திருவாரூர் மாவட்டம், கோயில் திருமாளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தெட்சிணாமூர்த்தி தனது 101 வது வயதில் வாக்களித்தார்.

  அதே போல் இந்தியா கூட்டணி நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் தமிழ்நாடு முதலமைச்சரின் தாய் மாமாவை அழைத்து வந்து வாக்களிக்க உதவி செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என பேட்டி அளித்தார்.

 தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள அரசூர் வாக்குசாவடி மையத்தில் மக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்  அப்போது இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது  தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்"   குறிப்பாக நாகப்பட்டினம் பகுதி கடைமடை பாசன பகுதி   இந்த மாவட்டம் விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள மாவட்டம் அதைபோல மீனவர்களின் பிரச்சனை தீ??வு காணமுடியாத கூழ்நிலை உள்ளது  ஆகவே மீனவர் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என பிரச்சரத்திற்கு போகும் போது மக்கள் சொன்னார்கள்  அதனை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறி  அந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நாளுமனறத்டதில் பேசுவேன் என சொன்னார்.