விஜய் வாக்களித்த மையத்தில் ஸ்மார்ட் பெண் அதிகாரிகள்!

விஜய் வாக்களித்த மையத்தில் ஸ்மார்ட் பெண் அதிகாரிகள்!

ம.பா.கெஜராஜ்,

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். 

புதிய கட்சியை துவங்கியுள்ள விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் எனது போட்டி இருக்கும் என்று தெரிவித்து வந்த நிலையில் இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்றார். 

அதற்காக அவர் ரஷ்யாவில் இருந்து துபாய் வந்து, துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

சில மணி நேரம் ஓய்வுக்கு பின்னர் சுமார் 11.45 மணிக்கு இன்னோவா காரில் வாக்குப்பதிவு நடைபெறும் மையத்திற்கு வந்தார் விஜய். 

அவர் வாக்கு பதிவு செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே வருவார் என்று அவர்கள் தொண்டர்களும் புகைப்பட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் காத்துக் கொண்டிருந்தனர். 

பின்னர் அவர் புறப்பட்ட உடன் அவரை பாலோ செய்து மையம் வரை  தொண்டர்கள் சென்றனர் மையத்தின் அருகையும் ஏகப்பட்ட கூட்டம் நெரிசலில் இருந்தது பாதுகாப்புக்காக போலீஸ் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு மையத்திற்கு உள்ளே சென்ற விஜய் வாக்குரிமைக்கான அடையாளத்தை காண்பித்து கையெழுத்திட்டார், பின்னர் அவர் கையில் மை வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வாக்கு செலுத்திய அவர் 30 வினாடிகள் சின்னத்தை தேடி அதன் பின்னரே வாக்களித்தார் .

அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் நோட்டோ எங்கு இருக்கிறது என்று தேடினாரோ என்று பேசிக் கண்டனர்.

விஜய் வாக்களித்த பின்னர் அவரை பத்திரமாக போலீசார் வழி அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் விஜய் வாக்களித்த மையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகள் கூட ஸ்மார்ட்டாக இருக்கும் படி தேர்தல் அலுவலர்கள் பார்த்துக் கொண்டனர் என்று அங்கிருந்து அவர்கள் பேசிக் கொண்டனர்.

விஜயின் இடது கையில் டிப்ஸ் ஏற்றியதற்கான பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.