மூன்று கிலோ மீட்டர் நீண்ட டிராபிக் ஜாம்!

மூன்று கிலோ மீட்டர் நீண்ட டிராபிக் ஜாம்!

 கு.அசோக்,

 கண்டெய்னர் லாரியின் (ஆக்ஸல்) பின்பக்க சக்கர ராடு உடைந்து பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டதால் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன அணிவகுத்து ஊர்ந்து சென்றது.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா  சுங்கச்சாவடி அருகே வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றின் பின்பக்க சக்கர ராடு உடைந்தது. இதனால் நிலை தடுமாறிய லாரி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது.

  இதன் காரணமாக வேலூர் சென்னை மார்க்கத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நீண்ட வரிசையில் நின்றது.

 இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளத்தில் இறங்கிய கண்டெய்னர் லாரியை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தி நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர்.

  இதனால் சில பல மணிநேரம் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்பட்டது.