மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இமெயிலில் கொலை மிரட்டல்!

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இமெயிலில் கொலை மிரட்டல்!

ஜி.கே.சேகரன்,
சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு
இமெயில் மூலம் மூலம்கொலை மிரட்டல் எடுக்கப்பட்டிருக்கிறது இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துரை தயாநிதி,கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல்  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உள்ள A-பிளாக்கில்  சிகிச்சை பெற்று வரும் அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். 

அவரது உடல் நல்ல முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஏற்கனவே சில வதந்திகள் பரவியது தற்போது இ மெயில் வாயிலாக அவருக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது

அதாவது, சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆக.10) வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

 மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், அந்த மருத்துவமனையின் ஏ-பிளாக் அமைந்துள்ள தளத்துக்கு கூடுதலாக 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.,

மேலும் அங்கு கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். 

 மறுபக்கம்,மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’

ஏற்கனவே துரை தயாநிதி அவர்களை குறித்து தவறான வதந்திகள் பரவியது நினைவு இருக்கலாம். அதை பரப்பிய வரை போலீசார்  இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

 இந்நிலையில் மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. ஆகவே போலீஸ் தீவிவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்த உண்மை தன்மையை அறிய போலீசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது  முக்கியஸ்தர்களுக்கு இப்படி அடிக்கடி மிரட்டல்கள் ஒரு உதவி நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரிப்பது எங்கள் கடமை. மின்னஞ்சலில் இந்த மிரட்டல் வந்தது குறித்து அதை அனுப்பியவர் விரைவில் பிடிபடுவார் என்றனர்.