பால் கொள்முதல் விலையை உயர்த்தும் திட்டமில்லை! அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தும் திட்டமில்லை, விவசாயிகளுக்கு தற்போது லாபம் கிடைக்கிறது - நட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கங்களை லாபத்தை ஈட்டுகும் வகையில் தற்போது மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வல்லண்டராமம் மற்றும் இலவம்பாடி பகுதிகளில் பால் குளிரூட்டும் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்து புதிய பால் குளிரூட்டும் மையத்தையும் துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைக்கு ஒன்றரை கோடி ரூபாய் நலத்திட்டம் மற்றும் கடனுதவிகள் வழங்கினோம். நாங்கள் சங்கங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்கும் வகையில் திட்டம் அறிவித்தோம்.
59 லட்சம் மதிப்பில் மாணியங்கள் வழங்கியுள்ளோம். இது கூட்டுறவு சங்க வளர்ச்சிக்கு உதவும். கடந்த ஆண்டு பால் உற்பத்தி உச்சகட்டமாக இருந்தது. இது ஆவின் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
இன்னும் அதனை அதிகரிக்க முயற்சிகளை செய்கிறோம் இந்த ஆண்டு அதனை அதிகரிப்போம்.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு ரூ.4 முதல் 5 வரையில் கிடைக்கிறது. இதனால் தான் பால் உற்பத்தி தரமானது. மாநில அளவில் 0.3 சதவிகிதம் தரம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.10 வரை கூடுதலாக வழங்கி வருகிறோம்.
இந்த துறை லாபத்தில் இயங்கி வருகிறது. நட்டத்தில் இயங்கும் சங்கங்களை எல்லாம் லாபத்தில் இயங்க வைக்க குறைந்த வட்டி கடன் வட்டியில்லா கடன் வழங்கி விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளோம்.
தனியார் நிறுவனங்களுக்கு கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் விற்பனை செய்வதை கட்டுபடுத்த இருக்கிறோம். உள்ளூர் பால் விற்பனையை நாங்கள் கட்டுபடுத்தவில்லை, மக்கள் தேவைக்கும் அளிப்போம்.
மக்களிடம் பால் தரமாக நாங்கள் அளிக்கிறோம், ஆவின் டிலைட் பால் நல்ல தரமாக, எல்லா வயதினரும் குடிக்க உகந்தது. பல ஆண்டுகளாக ஆவின் வியாபார பிரிவில் சுனக்கம் இருந்தது ஆனால் ஒரு சங்கத்தில் மட்டும் ஒரு மாதத்திலேயே பால் ரூ.9 லட்சம் விற்பனையாகியுள்ளது என்பது பெரிய அளவிலான வியாபாரம்.
ஆவின் நல்ல முறையில் வளர்ந்துள்ளது ஆவின் பால் சப்ளையில் எந்த ஒரு பிரச்சணையுமில்லை அனைத்து பகுதிகளுக்கும் திருச்சி மதுரை கோவை ஆகிய பகுதிகளில் தடையின்றி சப்ளை கிடைக்கிறது.
வேலூரில் ஆவின் பால் சப்ளை செய்வதில் எந்த பிரச்சணையுமில்லை அதிக அளவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்குகிறது.
பொருளாதாரத்தில் நிலைத்த தன்மை அடிப்படையில் சங்கங்கள் இயங்கி வருகிறது. வெகு விரைவில் அனைத்துகூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கும்.
ஆவின் பால் உற்பத்தி ஆண்டாண்டுக்கு கூடி தான் வருகிறது. அமுல் போன்ற நிறுவனங்களால் ஆவினுக்கு எந்த அச்சுறுத்தலுமில்லை. அதனை மேலும் பெருக்கவும் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும்.
ஆவின் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அதிலும் ஐஸ்கிரீம் நெய் போன்றவைகளுக்கு நல்ல டிமேண்ட் இருக்கிறது.
ஆவின் பாலில் தண்ணீர் கலப்பது குறித்த கேட்டதற்கு அது பழைய வீடியோ அதனை வெளியிட்டவர் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிபவரே அவருடைய சின்ன சின்ன பிரச்சணைக்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.
அவர் சம்பளத்தில் பணம் பிடித்த கோபத்தால் அவர் செய்துள்ளார் அது பழைய வீடியோ.
திருமாவளன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது சமூக நோக்கம் அதில் அரசியல் கிடையாது என கூறினார்.