அக்சீலியம் கல்லூரி மாணவிகள் தயாரித்த 5000 விதைப் பந்துகள்! கலெக்டர் துவக்கி பாராட்டு!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம் முழுவதும் மரங்களை நடும் வகையில் மாணவிகள் தயாரிக்கும் விதைப்பந்து பணியை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.
வேலூர்மாவட்டம், வேலூர் காட்பாடி அக்சிலியம் கல்லூரியில் சுற்றுசூழலை பாதுகாக்கவும் வேலூர் மலைபகுதிகளை பசுமையாக்கவும் இன்று கல்லூரியின் மாணவிகள் மூவாயிரம் பேர் ஒருங்கிணைந்து 5 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.
இதில் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி, சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன், சூழல் இயல் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இஸ்சபெல்லா ரோசிலின், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் 10 வகையான விதைகள் கொண்டு மாலைக்குள் 5 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் மாணவிகள் ஈடுபட்டனர்.
இவைகள் வேலூர் மாவட்டத்தில் விரைவில் மலைப்பகுதிகளில் விதைப்பந்துகளை தூவ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் இம்மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் 10லட்சம் மரக்கன்றுகளை இந்த ஆண்டு நட திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கி மரகன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தவிர மாவட்டம் முழுவதும் பனைவிதைகளை அதிக அளவில் நடவுள்ளோம் பசுமையாக்கும் இந்த பணியில் மாணவிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது இதன் மூலம் வேலூர் மாவட்டம் பசுமையாக்கபடும் என்று பேசினார்