பேனர் குடோன் எரிந்தது!

கு.அசோக்,
பேனர் வைக்கும் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பொருட்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை, சந்தைமேடு பகுதியில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது.
மீன் மார்க்கெட் பின்புறமாக உள்ள பேனர் மற்றும் டிஸ்கோவுக்கு தேவையான பொருட்கள் வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடோனில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீ பற்றிக்கொண்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் உடனடியாக இராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயினை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
மேலும் தீ விபத்து காரணமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் டிஸ்கோக்கு தேவையான பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.