. சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்பனையா? அதிர்ந்த அன்னா அசாரே உண்ணாவிரதம் துவங்குகிறார்!

ஜார்ஜ் ரவி,
ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் மதுப் பானத்தை விற்பனை செய்யலாம் என மகாராஷ்டிரா மாநில அரசின் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக ஆண்டுக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அப்படியிருக்க சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் மாநில அரசின் முடிவுக்கு சமூக ஆர்வலர் அன்னா அசாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் முடிவுக்கு எதிராக பிப்ரவரி 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் என அவர் அறிவித்துள்ளார்.
அன்னா அசாரேவின் அறிவிப்புகள் எப்போதுமே பரபரப்பாக இருக்கும்.அவர் துவக்கும் போராட்டங்களை அவரது கோரிக்கை நிறைவேறும்வரை கைவிடமாட்டார் என்பதே அவரது தனிச்சிறப்பு.