பிளாஸ்டிக் வேண்டாம்...பனைப்பொருட்கள் வேண்டும்!

க.பாலகுரு,
ஓ.என்.ஜி.சி சார்பில் உலக மாசு கட்டுபாடு தினத்தை முன்னிட்டு நெகிழி மாற்றாக பனைப்பொருட்களை கண்காட்சி நடைபெற்றது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மாசு கட்டுபாடு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி குழந்தைகள் தயாரித்த பிளாஸ்டிக் மாற்று பொருட்களை பார்வையிட்டு பொருட்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாலம் தொண்டு நிறுவனம், காரைக்கால் காவேரி அசட், ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் வட்டாரம் தண்டலை ஊராட்சியில் செயல்படுத்தி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உட்பட ஊராட்சியில் தேங்கியிருந்த மூன்று டன் பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் மாற்று பொருளாக பனைப்பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பனை ஓலையின் மூலம் பல்வேறு சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வீட்டு உபயோகப்பொருட்கள்,அஞ்சாரப்பெட்டி,இடியப்பாதட்டு,உப்பு பெட்டி,அரிசிக்கூடை,வெங்காயக்கூடை,கைவிசிறி..மடக்கு விசிறி,ஆடம்பரப்பை,கிலுகிலுப்பை, இன்னும் ஏராளமான பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன்,மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கராஜ் , மாவட்ட மறுவாழ்வு அலுவலர் புவனா, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் ஆகியோர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார். ஆகியோர் செய்திருந்தனர்.